கடந்த மாதம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 36 வயதான இந்திய பிரஜை, தமது குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் நடந்த இச்சம்பவத்தின் போது, ஆகாஷ் திவாரி என்ற அந்நபர், விமானப் பணிப்பெண்ணின் பின்புறத்தில் தனது உடலால் உரசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில், பணிப்பெண்ணை பின் தொடர்ந்த அவர், விமானத்தின் உணவு வைக்கும் இடம் வரையில் சென்று, அங்கும் அவரிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அப்பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தையடுத்து, சாங்கி விமான நிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கியவுடன், அந்நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.








