Mar 3, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர் ஒருவர் உட்பட இருவர் பலி
உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர் ஒருவர் உட்பட இருவர் பலி

Share:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தென்கிழக்கே ஒரு காலி இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், மலேசியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 7.27 மணியளவில் Rizal மாநிலத்தில் உள்ள Pililla என்ற சிறிய நகரத்தின் குடியிருப்புப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது அந்த ஹெலிகாப்டரில் இரண்டு மலேசியர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஒரு மலேசியர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ரிசால் மாநில போலீஸ் அதிகாரி ராம்ஜே பங்கா உறுதிப்படுத்தியுள்ளார். ஹெலிகாப்டரின் எஞ்சின் திடீரென செயலிழந்ததால், விமானி அவசரமாக அதைத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Related News