ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் நீரிணையானது மூடப்பட்டது.
தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் இந்திய கப்பல்கள் அவ்வழியே பயணிக்க இயலாமல், இந்தியாவிற்கான கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது.
இந்நிலையில், இந்திய கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.
இதன் காரணமாக, சவுதி துறைமுகத்திலிருந்து இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று, ஹார்முஸ் நீரிணை வழியாக, இந்தியாவின் மும்பை நகரை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.








