May 3, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா விசா விதிகளை மீறினால் கடும் தண்டனை: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

சுற்றுலா விசா விதிகளை மீறினால் கடும் தண்டனை: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!

Share:

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குச் சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா நிபந்தனைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சமீபகாலமாகச் சுற்றுலா விசாவில் வருபவர்கள் சிலர், முறையான வேலை அனுமதி இன்றி பகுதிநேரப் பணிகளில் ஈடுபடுவதாகவும், விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ICA அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களின் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் சிங்கப்பூர் வரத் தடை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News