May 17, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள syabu பறிமுதல்: மேலும் 5 மலேசியர்கள் கைது
உலகச் செய்திகள்

தாய்லாந்தில் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள syabu பறிமுதல்: மேலும் 5 மலேசியர்கள் கைது

Share:

பேங்காக், மே.17-

தாய்லாந்து நாட்டின் Nakhon Pathom பகுதியில் 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள 440 கிலோ syabu வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த மே 14-ஆம் தேதி, மேலும் 5 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே 5ஆம் தேதி Hat Yai பகுதியில் 5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள 102 கிலோ syabu பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Songkhla மாநிலத்தின் பாடாங் பெசார் வழியாக தாய்லாந்துக்குள் நுழைந்த மலேசிய வாகனங்களை அந்நாட்டு போலீசார் கண்காணித்தனர்.

இந்நிலையில், Nakhon Pathom மாநிலத்தின் Muang மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டதுடன், 4 வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440 கிலோ syabu கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சொத்துகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தாய்லாந்தில் அவர்களுக்கு உதவிய உள்ளூர் தொடர்புகளை கண்டறியும் விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்.

Related News

விஜய் மீது பொறாமையா? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

விஜய் மீது பொறாமையா? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சுற்றுலாப் பயணிகள் தங்கும் விசா இல்லாத காலம் 30 நாட்களாகக் குறைப்பு: தாய்லாந்து அரசு அதிரடித் திட்டம்

சுற்றுலாப் பயணிகள் தங்கும் விசா இல்லாத காலம் 30 நாட்களாகக் குறைப்பு: தாய்லாந்து அரசு அதிரடித் திட்டம்

அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு: முதல் நாள் முக்கியத் தகவல்கள்

அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு: முதல் நாள் முக்கியத் தகவல்கள்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி: உலகெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி: உலகெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

தனியார் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்ததில், அதில் பயணம் செய்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தனியார் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்ததில், அதில் பயணம் செய்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில், 65 அடி உயர பிரம்மாண்டமான 'திரிசூலம்' நிறுவப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில், 65 அடி உயர பிரம்மாண்டமான 'திரிசூலம்' நிறுவப்பட்டுள்ளது.