Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நான் இல்லை: நடிகை ஆண்ட்ரியா அதிரடி முடிவு
சினிமா

ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நான் இல்லை: நடிகை ஆண்ட்ரியா அதிரடி முடிவு

Share:

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், அதில் தான் நடிக்கப்போவதில்லை என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதில் கார்த்தி, ரீமா சென் ஆகியோருடன் இணைந்து ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இது குறித்துப் பேசிய ஆண்ட்ரியா, "ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதில் நான் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன். முதல் பாகத்திற்காக 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அது எனது வாழ்க்கையில் மிகவும் சவாலான மற்றும் உடல் ரீதியாக சோர்வடையச் செய்த ஒரு திட்டமாகும்," எனத் தெரிவித்துள்ளார்.

செல்வராகவனுடன் பணியாற்றுவது ஒரு சிறந்த கற்றல் அனுபவம் என்றாலும், அது மிகவும் கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வெற்றிமாறனின் ‘அரசன்’, மிஷ்கினின் ‘பிசாசு 2’ மற்றும் கோபி நயினாரின் ‘மனுஷி’ உள்ளிட்ட பல படங்களில் ஆண்ட்ரியா பிஸியாக நடித்து வருகிறார்.

முதல் பாகத்தில் அவரது ‘சோழ இளவரசி’ கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் அவர் இடம்பெறாதது ரசிகர்களிடையே சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Related News