தமிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. இதுவரை அரசியலில் சாதித்த பல பிரபலங்கள் சினிமாவால் பிரபலமாகி பின் அரசியலில் களமிறங்கியவர்கள்.
இதனால் தமிழ்நாட்டில் பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது ஒன்றும் புதிது அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கி பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், இப்போது நடிகர் விஜய்யும் நுழைந்துள்ளார்.
சினிமாவை விட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசியலில் இறங்கியுள்ளார். தனது கட்சி வேலைகளைப் பரபரப்பாகச் செய்து கொண்டு வருகிறார் விஜய்.
ஏற்கெனவே பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், இப்போது இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் களமிறங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்தியத் தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி போட்டிப் போட உள்ளாராம்.








