Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மந்திரி பெசார் பதவிக்கான எந்தவொரு "அட்டைப் பட" வேட்பாளரையும் அறிவிக்கவில்லை என்று அக்கூட்டணியின் புத்திரி வங்சா வேட்பாளர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் சுல்தானின் ஆட்சி அதிகாரத்துக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளரை அறிவிப்பது அவசியமில்லை என்றும், அந்த நியமன அதிகாரம் இறுதியில் ஜோகூர் சுல்தானின் அதிகார வரம்பில் இருப்பதை பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக மதிப்பதாகவும் மஸ்லீ மாலிக் விளக்கமளித்துள்ளார்.

நேற்று இஸ்கந்தர் புத்திரியில் நடைபெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மஸ்லீ மாலிக், மாநில மந்திரி பெசார் பதவிக்கென ஒரே ஒருவரை முன்னிறுத்துவதற்குப் பதிலாக, மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்யத் தயாராக உள்ள திறமையான வேட்பாளர்கள் குழுவையே கூட்டணி மக்களிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

கல்லூரி மாணவர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை; ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு

கல்லூரி மாணவர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை; ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு