Jul 6, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் லான்ஸ் கோப்ரல்
தற்போதைய செய்திகள்

குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் லான்ஸ் கோப்ரல்

Share:

ஷா ஆலாம், ஜூன்.12-

தனது காதலியான தஞ்சோங் மாலிங் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் கொலை செய்ததாக ஒரு போலீஸ்காரரான லான்ஸ் கோப்ரல் ஒருவர், இன்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

27 வயது லான்ஸ் கோப்ரல் முகமட் அலிஃப் மொன்ஜானி என்ற அந்த போலீஸ்காரர் கடந்த ஆண்டு ஜுலை 15 ஆம் தேதி மாலை 6 மணியளவில் உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உலு பெர்னாம், எஸ்கேசி கிளேடாங் செம்பனைத் தோட்டத்தில் 25 வயது பல்கலைக்கழக மாணவி நூர் ஃபாரா கார்த்தினி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40ஆ ண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டமான 302 பிரிவின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவரான அந்த போலீஸ்காரர், நீதிபதி ஜூலியா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

எனினும் அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். கொலை வழக்கு என்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

Related News

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது