Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கெடா மாநிலம் கெப்பாலா பத்தாஸ், ஜாலான் தித்தி காஜா பகுதியில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு, காரில் இருந்த பெண், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஆறு அங்குல நீளமுடைய “ராம்போ” கத்தி ஒன்று சந்தேகநபரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள வயல் வெளியில் அந்தக் கத்தியானது மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான தனித்து வாழும் தாயான அப்பெண், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 32 வயது ஆடவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு