Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலம், பண்டார் ஸ்ரீ செண்டாயான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், குழந்தை பராமரிப்பாளரின் கவனிப்பில் இருந்த ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் அக்குழந்தை சுயநினைவிழந்த நிலையில் இருந்ததைக் கண்ட அந்த பராமரிப்பாளர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அக்குழந்தையின் 30 வயதான தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அக்குழந்தைக்கு துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் அவசர முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், அக்குழந்தை உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சவப்பரிசோதனைக்காக அக்குழந்தையின் சடலமானது ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசஹார் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்