கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஆடவர் ஒருவர் சராமரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த B. பிரகாஷ் ராவ் என்ற நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரைடர் என்று அழைக்கப்படும் 41 வயது நபர் நேற்று இரவு 9.50 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 25, ஜாலான் அபாடி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக பிரகாஷ் ராவை வரும் ஜுன் 14 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் இன்று நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மே 26 ஆம் தேதி 34 வயது நபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரகாஷ் ராவ் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


