கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஆடவர் ஒருவர் சராமரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த B. பிரகாஷ் ராவ் என்ற நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரைடர் என்று அழைக்கப்படும் 41 வயது நபர் நேற்று இரவு 9.50 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 25, ஜாலான் அபாடி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக பிரகாஷ் ராவை வரும் ஜுன் 14 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் இன்று நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மே 26 ஆம் தேதி 34 வயது நபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரகாஷ் ராவ் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்


