Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முகைதீன் யாசின் பரிசீலனை
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முகைதீன் யாசின் பரிசீலனை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

சூதாட்ட நிறுவனங்களிடமிருந்த எதிர்க்கட்சியினர் அரசியல் நிதியை பெற்று வருகின்றனர் என்று பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரான அன்வார் கூறியதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டுகிறார்.

பிரதமர் அன்வாரின் குற்றச்சாட்டில் அடிப்படை உண்மையில்லை, முற்றிலும் அவதூறாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.

அன்வாரின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தற்போது தமது வழக்கறிஞருடன் கலந்து ஆலோசித்து வருவதாக முகைதீன் தெரிவித்தார்.

Related News