Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

Share:

தமிழக அரசியல் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறியதற்கு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சு மலேசியா உட்பட உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டை போதிக்கவில்லை என்றும், அது அமைதி, இரக்கம் மற்றும் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு உன்னத வாழ்வியல் முறை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அரசியல் லாபத்திற்காக இந்து மதத்திற்கு எதிராக இத்தகைய ஆபத்தான கருத்துக்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ள டான்ஸ்ரீ நடராஜா, உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சைத் திரும்பப் பெற்று உலக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு