ஜோகூர் மாநிலம், செரி ஆலாம் பகுதியில், கடந்த ஆண்டு, தொடக்கப் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளானது தொடர்பாக உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மாணவி பாலியல் சீண்டல் செய்யப்பட்டது குறித்து ‘முகமட் ஃபட்லி சாலே’ என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆனதையடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.
அப்பதிவு பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்ததாக ஹூ சுவான் ஹுவாட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு செரி ஆலாம் பகுதியில் இந்த பாலியல் சீண்டல் சம்பவமானது நடந்ததாகவும் நம்பப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 28 வயது நபரிடம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.








