Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

Share:

சிரம்பானில் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் தொட்டிலில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் கண்டறியப்பட்ட 7 மாத ஆண் குழந்தையின் மரணத்திற்கு, கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மே 20-ஆம் தேதி புதன்கிழமை, ரெம்பாவ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையின் ஆரம்ப முடிவுகளில், இது தெரியவந்துள்ளதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசாஹர் அப்துல் ரகீம் தெரிவித்துள்ளார்.

எனினும், அதனை முழுமையாக உறுதி செய்வதற்காக மேலதிக பரிசோதனை முடிவுகளுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, கடந்த மே 19-ஆம் தேதி, 38 வயதுடைய குழந்தை பராமரிப்பாளரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தி... | Thisaigal News