பினாங்கு மாநிலம், வடக்கு செபராங் பிறை பகுதியில், போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், போதைப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்ட ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, மாநில போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 36 மற்றும் 42 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் சிக்கியதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் வேப் பொருட்கள், எம்.டி.எம்.ஏ தூள்,கெட்டமின் தூள் மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்கள் விநியோகித்ததில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் ஒருவரைக் கைது செய்த போலீசார், அவரது வழி காட்டுதலின் படி, வீடு ஒன்றில் மற்றொருவரைக் கைது செய்துள்ளனர்.








