சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் மரணத்தில் எந்த ஒரு குற்றச்செயலுக்கான ஆதாரங்களும் இல்லாத நிலையில், அதனை ஒரு விபத்தாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.
நேற்று அதிகாலை நடந்த இச்சம்பவத்தின் போது, 42 வயதுடைய அந்த உதவி கண்காணிப்பாளர், கட்டிடத்தின் 8-ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார், போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த அதிகாரியின் சவப்பரிசோதனை முடிவுகள் வெளியாகிவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்குகள் பகாங் மாநிலம், குவாந்தானில் நடைபெறும் என்றும் ஷாசெலி கஹார் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








