Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி
தற்போதைய செய்திகள்

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

Share:

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் மரணத்தில் எந்த ஒரு குற்றச்செயலுக்கான ஆதாரங்களும் இல்லாத நிலையில், அதனை ஒரு விபத்தாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

நேற்று அதிகாலை நடந்த இச்சம்பவத்தின் போது, 42 வயதுடைய அந்த உதவி கண்காணிப்பாளர், கட்டிடத்தின் 8-ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார், போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த அதிகாரியின் சவப்பரிசோதனை முடிவுகள் வெளியாகிவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்குகள் பகாங் மாநிலம், குவாந்தானில் நடைபெறும் என்றும் ஷாசெலி கஹார் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு