Mar 28, 2026
Thisaigal NewsYouTube
நகைக்கடையில் கொள்ளை: இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 5 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

நகைக்கடையில் கொள்ளை: இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 5 ஆண்டுச் சிறை

Share:

மலாக்கா, ஜூன்.10-

கடந்த மாதம், மலாக்காவில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடித்தது மற்றும் கடை உரிமையாளரின் மனைவிக்கு காயம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநருக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் ஒரு பிரம்படித் தண்டனையை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 29 வயது மெல்வின் யென் என்ற அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.

கடந்த மே 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் மலாக்கா தெங்கா, ஜாலான் ஜாவா, கம்போங் ஜாவாவில் உள்ள தை குவோங் நகைக்கடையில் அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வட்டி முதலையிடம் 2 லட்சம் ரிங்கிட் கடனை வாங்கிய தனது காதலியின் கடனைத் திரும்ப அடைப்பதற்காக நகைக்கடையில் கொள்ளையிட்டதாக அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், நீதிமன்றத்தில் காரணம் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்