Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நகைக்கடையில் கொள்ளை: இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 5 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

நகைக்கடையில் கொள்ளை: இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 5 ஆண்டுச் சிறை

Share:

மலாக்கா, ஜூன்.10-

கடந்த மாதம், மலாக்காவில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடித்தது மற்றும் கடை உரிமையாளரின் மனைவிக்கு காயம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநருக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் ஒரு பிரம்படித் தண்டனையை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 29 வயது மெல்வின் யென் என்ற அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.

கடந்த மே 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் மலாக்கா தெங்கா, ஜாலான் ஜாவா, கம்போங் ஜாவாவில் உள்ள தை குவோங் நகைக்கடையில் அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வட்டி முதலையிடம் 2 லட்சம் ரிங்கிட் கடனை வாங்கிய தனது காதலியின் கடனைத் திரும்ப அடைப்பதற்காக நகைக்கடையில் கொள்ளையிட்டதாக அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், நீதிமன்றத்தில் காரணம் கூறினார்.

Related News

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

 பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட்  அபராதம்!

பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம்!