சுங்கை பெட்டாணி, ஜாலான் லென்சோங் தீமோர் சாலையின் மஸ்ரா சமிக்ஞை விளக்கு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஓர் இந்திய ஆடவர் உயிரிழந்தார்.
நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 47 வயதுடைய பி.கணேசன் என்ற ஆடவர் தலையில் ஏற்பட்ட கடுங்காயங்களினால் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில், அவருடன் புரோட்டோன் சாகா காரில் பயணித்த அவரின் 9 வயது மகன் சொற்பக்காயங்களுடன் உயிர்த்தப்பியதாக Kuala Muda, மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைடி ஷே ஹசான் தெரிவித்தார்.
அவ்விருவரும் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த, சாலையை மூடும் இரும்பு வேலியை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஸைடி ஷே ஹசான் குறிப்பிட்டார்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்


