சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக மேலும் ஒரு தவணைக்காலம் பதவி வகிக்க டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவிற்கும் கட்டுப்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 16 ஆவது மந்திரி பெசாராக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நியமிக்கப்பட்ட 43 வயதான அமிருடின் ஷாரி, விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, மாநில அரசை தற்காத்துக்கொள்வதற்கு உரிய வியூகம் வகுக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


