Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தொடர்ந்து மந்திரி பெசாராக இருப்பேன் – அமிருடீன் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

தொடர்ந்து மந்திரி பெசாராக இருப்பேன் – அமிருடீன் நம்பிக்கை

Share:

சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக மேலும் ஒரு தவணைக்காலம் பதவி வகிக்க டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவிற்கும் கட்டுப்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 16 ஆவது மந்திரி பெசாராக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நியமிக்கப்பட்ட 43 வயதான அமிருடின் ஷாரி, விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, மாநில அரசை தற்காத்துக்கொள்வதற்கு உரிய வியூகம் வகுக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Related News