மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், ரோஹிங்கியா நாட்டவருக்குச் சொந்தமான ஸ்போர்ட்ஸ் கார் உட்பட 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை சாலைப் போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், சாலை விதிமுறை மீறல்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான வாகன உரிமைகள் தொடர்பில் இந்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஆடம்பர மற்றும் உயர் சக்தி கொண்ட கார்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ரோஹிங்கியா நாட்டவர் ஒருவரின் பெயருடன் தொடர்புடைய ஸ்போர்ட்ஸ் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
வாகனங்களின் உரிமை, பதிவு மற்றும் அவை எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து ஜே.பி.ஜே தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.








