Jul 4, 2026
Thisaigal NewsYouTube
காம உணர்ச்சிக்கு மகளைப் பயன்படுத்திய தந்தையின் வக்கிரச் செயல் அம்பலம்
தற்போதைய செய்திகள்

காம உணர்ச்சிக்கு மகளைப் பயன்படுத்திய தந்தையின் வக்கிரச் செயல் அம்பலம்

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.06-

தனது காம உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்கு தனது சொந்த மகளைக் கடந்த பத்து ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த ஒரு தந்தையின் வக்கிரச் செயல் கடந்த வாரம் அம்பலமாகியுள்ளது.

தனது மூத்த மகளை 8 வயதிலிருந்து 18 வயது வரை ஒரு போகப் பொருளாக 41 வயதுடைய நபர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மலாக்கா, தம்பாப் பாயாவைச் சேர்ந்த அந்தப் பெண், தனது தந்தை, தம்முடன் கொண்டுள்ள தகாத உறவு குறித்து கடந்த ஆகஸ்ட் முதல் தேதி தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பொதுவில் அம்பலமாகியுள்ளது.

இந்த தகாத உறவு குறித்து தனது தாயாரிடம் கூறினால், மற்ற சகோதரிகளையும் சீரழித்து விடுவதாக அந்த நபர், மகளை மிரட்டி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அறிந்த அந்தப் பெண்ணின் 41 வயதுடைய தாயார் தனது ஆறு பிள்ளைகளையும் மலாக்காவிலிருந்து அழைத்துக் கொண்டு கோலாலம்பூருக்கு வந்தப் பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார், அந்த ஆசாமியைக் கைது செய்துள்ளனர் என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸூல்கைரி முக்தார் உ றுதிப்படுத்தியுள்ளார்.

விசாணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றாஅணையைப் போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்