மலாக்காவில் 22 வார கருவை கலைத்து குழந்தைப் பிறப்பை மறைத்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் மற்றும் அவரது 17 வயது காதலியும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25 -ஆம் தேதி மாலை சுமார் 6.50 மணியளவில், இரத்த வெள்ளத்தில் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவ அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், கருக்கலைப்பு மாத்திரைகள் எடுத்ததாக சந்தேகிக்கப்படும் அப்பெண்ணுக்கு, கரு வெளிவராமல் போனதால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








