Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தூனாய் ரஹ்மா உதவித் தொகை ஐடிலட்ஹா பெருநாளுக்கு முன்பு வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

தூனாய் ரஹ்மா உதவித் தொகை ஐடிலட்ஹா பெருநாளுக்கு முன்பு வழங்கப்படும்

Share:

தூனாய் ரஹ்மா எனப்படும் மக்களுக்கான ரொக்க உதவித் தொகையின் மூன்றாம் கட்ட நிதி உதவி, ஐடிலட்ஹா பெருநாளுக்கு முன்னதாக வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் 200 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். மேலும்,ஈ-தூனாய் பெலியா ரஹ்மா எனப்படும் 18 முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கான 200 வெள்ளி நிதி உதவியும், இம்மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு முன்னதாக வழங்கப்படும் என இன்று மக்களவையில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related News