மலேசியாவில் இலக்கு அடிப்படையிலான டீசல் மானிய முறையில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு, ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் வெளியிடப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சபா, சரவாக் மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் நிதி அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விண்ணப்ப நடைமுறையை எளிமைப்படுத்துதல், தகுதி விதிமுறைகளில் தளர்வு வழங்குதல் உள்ளிட்ட மேம்பாடுகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








