2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதிலும் நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற கெம்பாரா ஜாலூர் கெமிலாங் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மக்களின் நலனைப் பாதுகாப்பதுடன், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும் பட்ஜெட் 2027 வழிவகுக்கும் வகையில் திட்டமிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் முயற்சிகளும் இந்த பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பாஹ்மி குறிப்பிட்டார்.








