வரும் ஜுலை மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வேட்பாளர்களின் முதல் தோற்றம் மட்டுமின்றி, எட்டு முன்னாள் அம்னோ தலைவர்களையும் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக நடைபெறும் என்று பெரிக்காதான் நேஷனல் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டும், வேட்பாளராக திகழும் தலைவர்களின் பெயரை அறிவிக்க அஸ்மின் அலி மறுப்பு தெரிவித்தார்.
விளைவு எதுவாக இருந்தாலும், பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகளின் இரண்டு யோசனைகளுக்கு இடையிலான போர் நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


