பேரா, சித்தியவானைச் சேர்ந்த வெண்ணிலவன் பரந்தாமன் உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர்- ரின் சிறப்பு அ திகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மொழியில் தனது இளங்கலை பட்டபடிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் நிறைவு செய்த வெண்ணிலவன் , தற்போது மொழி மற்றும் தொடர்புத் துறையில் முதுகலை பட்டபடிப்பை உப்சி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்
பேரா மாநில மஇகாவின் புத்ரா பிரிவின் தலைவராகவும் வெண்ணிலவன் பொறுப்பேற்றுள்ளார்.
தலைமைத்துவ பண்பியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சுமார் ஒன்பது நாடுகளுக்குச் சென்று உலகலாவிய நிலையில் இளைஞர் மாநாடு, சிறப்பு சந்திப்பு,பட்டிமன்றம்,பன்னாட்டு கருத்தரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டு, பல விருதுகளையும் வென்றுள்ளார்.









