21 கிலோ ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாக ஒரு மாற்றும் திறனாளி உட்பட இரண்டு இந்திய இளைஞர்கள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
39 வயதுடைய ஒரு மாற்றுத் திறனாளியான எஸ். கணேசன் மற்றும் ஆர்.ஆர். பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த மே 16 ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஜாலான் ஜெலாபாங் பாயு 6, புன்சாக் ஜெலாபாங், ஈப்போ என்ற இடத்தில் 21 கிலோ போதைப்பொருளைக் கடத்தியதாக மாஜிஸ்திரேட் ஜெசிகா டைமிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டம் 39 B பிரிவின் கீழ் கணேசனும், பிரபாகரனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் இருவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


