May 7, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் பள்ளியில் மின்சாரம் தாக்கி நான்காம் படிவ மாணவர் பலி - மற்றொரு மாணவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

சரவாக் பள்ளியில் மின்சாரம் தாக்கி நான்காம் படிவ மாணவர் பலி - மற்றொரு மாணவர் படுகாயம்

Share:

சரவாக் மாநிலம் சிபு, தாரோ பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் வழக்கமான தொழுகைக்காகத் தயாரான வேளையில், மின்சாரம் தாக்கியதில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பள்ளியின் நீராடும் பகுதியில், மூன்று மாணவர்களுக்கு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மாத்து தாரோ மாவட்ட போலீஸ் தலைவர் ரகீம் மிஹோஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தின் போது, 16 வயதுடைய மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், 15 வயதுடைய மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் கடுமையாக காயமடைந்து, தாரோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிபு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மற்றொரு 15 வயது மாணவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரகீம் மிஹோஸ் தெரிவித்துள்ளார்.

Related News

பங்கோர் விபத்து: ‘ஆம்புலன்ஸ் தாமதம்’ என்பது அப்பட்டமான பொய் - டத்தோ அ.சிவநேசன் கடும் எச்சரிக்கை

பங்கோர் விபத்து: ‘ஆம்புலன்ஸ் தாமதம்’ என்பது அப்பட்டமான பொய் - டத்தோ அ.சிவநேசன் கடும் எச்சரிக்கை

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தோல்வி / மலேசியாவில் ஆதிக்கம் இழக்கும் அபாயம் இருப்பதாக மகாதீர் எச்சரிக்கை

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தோல்வி / மலேசியாவில் ஆதிக்கம் இழக்கும் அபாயம் இருப்பதாக மகாதீர் எச்சரிக்கை

நஜிப் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல - 1.3 பில்லியன் தீர்ப்பை நிறுத்தி வைக்க எஸ்ஆர்சி தரப்பு எதிர்ப்பு

நஜிப் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல - 1.3 பில்லியன் தீர்ப்பை நிறுத்தி வைக்க எஸ்ஆர்சி தரப்பு எதிர்ப்பு

ஊடக புத்தாக்க நிதிக்கு 20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பு, 5-ஆம் கட்ட விண்ணப்பம் மே 14 வரை – தியோ

ஊடக புத்தாக்க நிதிக்கு 20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பு, 5-ஆம் கட்ட விண்ணப்பம் மே 14 வரை – தியோ

இந்தோனிசிய பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்: இரு பாகிஸ்தானியர்கள் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

இந்தோனிசிய பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்: இரு பாகிஸ்தானியர்கள் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் - சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா உறுதி

சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் - சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா உறுதி