Jul 14, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்
அரசியல்

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

Share:

தெற்கு தாய்லாந்தின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான குழுவின் புதிய தலைவராக தானுத் சுவர்ணானந்தா நியமிக்கப்பட்டிருப்பதை மலேசியா வரவேற்றுள்ளது. இதற்கான முழுமையான ஒத்துழைப்பை மலேசியா வழங்கும் என்று மலேசியத் தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இன்று உறுதிபடத் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை தந்துள்ள தாய்லாந்தின் புதிய தற்காப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் அதுல் பூன்தும்ஜாரோயன் இன்று கோலாலம்பூரில் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மலேசியத் தற்காப்பு அமைச்சர், இரு நாடுகளும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தெற்கு தாய்லாந்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் முற்றிலும் தாய்லாந்தின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும், மலேசியாவின் பங்கு அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்குவது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மலேசியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சிறப்பு உதவியாளர் Datuk ராபின் பாசிர், தொடர்ந்து இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்றும் மலேசியத் தற்காப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related News

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து  வெளியேறுகிறது ஜசெக.

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து வெளியேறுகிறது ஜசெக.

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவிக்கிறார் அன்வார்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவிக்கிறார் அன்வார்

'நெட்வொர்க் ஸ்கூல்' சர்ச்சை: இஸ்ரேலுடன் தொடர்பா? முழுமையான விசாரணைக்கு ஜோகூர் அரசாங்கம் உத்தரவு

'நெட்வொர்க் ஸ்கூல்' சர்ச்சை: இஸ்ரேலுடன் தொடர்பா? முழுமையான விசாரணைக்கு ஜோகூர் அரசாங்கம் உத்தரவு

பிரதமர் அன்வார், சிங்கப்பூர் அதிபரை நேரில் சந்தித்துப் பேசினார்

பிரதமர் அன்வார், சிங்கப்பூர் அதிபரை நேரில் சந்தித்துப் பேசினார்

பாஸ் மீது அதீத நம்பிக்கை வேண்டாம்: எப்போது வேண்டுமானாலும் ‘அரசியல் இலக்குகளை ’ மாற்றுவார்கள் – ஜாஹிட் ஹமிடி அதிரடி!

பாஸ் மீது அதீத நம்பிக்கை வேண்டாம்: எப்போது வேண்டுமானாலும் ‘அரசியல் இலக்குகளை ’ மாற்றுவார்கள் – ஜாஹிட் ஹமிடி அதிரடி!