May 31, 2026
Thisaigal NewsYouTube
உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்
சிறப்பு செய்திகள்

உலகச் சாதனை படைத்த கம்பார் சிறுவன் ஷாவின்: 1 நிமிடம் 14 வினாடிகளில் 65 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டார்

Share:

ஈப்போ, பிப்ரவரி.18-

65 நாடுகளின் கொடிகளை 1 நிமிடம் 14 வினாடிகளில் அடையாளம் கண்டு கூறி, மலேசியாவின் பேராக் மாநிலம், கம்பார் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஷாவின் குழந்தைகளுக்கான உலகச் சாதனையைப் படைத்து, Kids book of Records என்ற சாதனைப் புத்தகத்திலும் பெயர் பதித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, கம்பாரில் நடைபெற்ற இந்நிகழ்வில், நினைவாற்றல் மற்றும் பொது அறிவுத் துறையில் ஷாவின் தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தி ஒரு புதிய மைல்கல்லை எட்டியதால் அவருக்கு இந்த சாதனையானது வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், 65 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் கண்டு வாசித்து, பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்த ஷாவின் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அச்சிறுவனின் சாதனையை அறிந்து, Prima Kampar Residensi-யிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் வி. பவானி ஷாஷா, அவருக்கு தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

ஷாவின் குழந்தையாக இருக்கும் போது, பொழுதுபோக்கிற்காக அவனிடம் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை காட்டி அடையாளம் காணுமாறு கூறிய அவரது தந்தை வினோத், பின்னர் அவனது அசாத்திய நினைவாற்றலைக் கண்டு, தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், அப்பெற்றோர் பல முயற்சிகள் எடுத்து, ஷாவினை உலகச் சாதனை படைக்கும் அளவிற்கு ஊக்குவித்ததாகவும் பவானி ஷாஷா குறிப்பிட்டுள்ளார்.

சிறு வயதிலிருந்தே உலகச் சாதனைகள் படைத்து வரும் ஷாவின் போன்ற குழந்தைகளால், மாலிம் நவார் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள் என்று தான் நம்புவதாகவும் பவானி ஷாஷா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஷாவின் மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!