Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அதிகாலையில் அதிர்ச்சி.. தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 15 பேர் துடிதுடித்து பலி, பலர் படுகாயம்!
உலகச் செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி.. தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 15 பேர் துடிதுடித்து பலி, பலர் படுகாயம்!

Share:

புர்கினா பாசோ, பிப்ரவரி 26 -

தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அமைதியற்ற ஒரு சூழலே பல காலமாக நிலவி வந்தது.

வடக்கு புர்கினா பாசோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை நடந்த பிரார்த்தனையின் போது கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட "பயங்கரவாத" தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தேவாலயத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து உள்ளூர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த எஸ்ஸகனே கிராமத்தை உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது..

இதற்கிடையே புர்கினா பாசோவில் அமைதி திரும்ப வேண்டும் என உள்ளூர நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிலர் திட்டமிட்டு தங்கள் பகுதியை நாசம் செய்ய இந்தத் தாக்குதலை நடத்தியள்ளதக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் செயல்பாடும் ஜிஹாதிக் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தேவாலயத்தின் மீதான இந்தத் தாக்குதலை அந்த பயங்கரவாத குழு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களிலும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தேவாலயத்தின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும், ஒரு சமயம் சர்ச் மத குருவையும் அவர்கள் கடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

Related News