கரடி ஒன்று நடமாடியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதி மற்றும் பூங்காவிற்கு அருகில் இந்த கரடி முதன்முதலில் காணப்பட்ட நிலையில், பின்னர் ஒரு பள்ளிக்கு மிக அருகில் நடமாடியதால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்தப் பகுதியில் இதுவரை கரடி நடமாட்டம் பதிவாகாத நிலையில், இந்த முதல் சம்பவத்தாலேயே நகராட்சி அதிகாரிகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர்.
சமீபகாலமாக நகர்ப்புறங்களில் வனவிலங்குகளின் ஊடுருவலும், மனிதர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. காடுகளில் அவற்றுக்கான இயற்கை உணவுகள் பற்றாக்குறை ஏற்படுவதே இத்தகைய விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தப்பியோடிய அந்தக் கரடியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.








