Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி
உலகச் செய்திகள்

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

Share:

இந்தியாவில் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியுள்ளது.

போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

தலைநகர் புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்ததுடன், காவல்துறையினர் தடியடி நடத்தி பலரைக் கைது செய்தனர். இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினை குறித்துக் கேள்வி எழுப்பியதோடு, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான சட்ட மசோதாவை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Related News