ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதைகளில் செல்ல முயன்ற ஆறு கப்பல்களை ஈரானியப் புரட்சிகர காவல்படை கடற்படை எச்சரிக்கை குண்டுகளை முழங்கி வழிமறித்துத் திருப்பியனுப்பியுள்ளது.
தெஹ்ரான் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத வழிகளைப் பயன்படுத்திய இந்தக் கப்பல்கள் மீதான நடவடிக்கை, அப்பகுதியில் தொடர்ந்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரான் இந்த மூலோபாய ஜலசந்தியைத் திறம்பட முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையை மீறிச் செல்ல முயலும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.








