அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகருக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலத்திற்கு அருகே நடத்தப்பட்ட பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தகவலறிந்த உடனடியாக அவசர காலப் பணியாளர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், குற்றவாளிகளைக் கண்டறியும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.








