Apr 8, 2026
Thisaigal NewsYouTube
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் - இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம்
உலகச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் - இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம்

Share:

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டதால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னதாக, மலேசிய நேரப்படி இன்று காலை 8 மணிக்குப் பிறகு, ஈரான் முற்றிலும் அழித்துவிடும் வகையில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் Hormuz நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.

Related News

சிங்கப்பூரில் சோகம்: கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு

சிங்கப்பூரில் சோகம்: கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு

அமெரிக்க-ஈரான் சண்டை நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு - தங்கம் விலை புதிய உச்சம்!

அமெரிக்க-ஈரான் சண்டை நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு - தங்கம் விலை புதிய உச்சம்!

இந்தோனீசியா: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குக் குழந்தைகளைக் கடத்திய 19 பேர் மீது குற்றச்சாட்டு

இந்தோனீசியா: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குக் குழந்தைகளைக் கடத்திய 19 பேர் மீது குற்றச்சாட்டு

ஆசிய நாடுகளின் விமானச் சேவைகள் குறைப்பு: எரிபொருள் தட்டுப்பாட்டால் நெருக்கடி

ஆசிய நாடுகளின் விமானச் சேவைகள் குறைப்பு: எரிபொருள் தட்டுப்பாட்டால் நெருக்கடி

ஈரான் பிடியிலிருந்த ஜப்பானியர் விடுவிப்பு: ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈரான் பிடியிலிருந்த ஜப்பானியர் விடுவிப்பு: ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆசியக் கடற்பரப்பில் காலியாக வலம்வரும் கத்தார் சரக்குக் கப்பல்கள்: மத்திய கிழக்குப் போரால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்!

ஆசியக் கடற்பரப்பில் காலியாக வலம்வரும் கத்தார் சரக்குக் கப்பல்கள்: மத்திய கிழக்குப் போரால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்!