ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டதால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மலேசிய நேரப்படி இன்று காலை 8 மணிக்குப் பிறகு, ஈரான் முற்றிலும் அழித்துவிடும் வகையில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கும் Hormuz நீரிணையைத் திறப்பதற்கும் முறையாக ஒப்புக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.








