Apr 17, 2026
Thisaigal NewsYouTube
மொத்தமாக முடங்கிய ஜெர்மனி.. மாறிய கிளைமேட்.. ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் தவிப்பு
உலகச் செய்திகள்

மொத்தமாக முடங்கிய ஜெர்மனி.. மாறிய கிளைமேட்.. ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் தவிப்பு

Share:

முனிச்: ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் தெற்கு பகுதிகள் பனிப்பொழிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் நகரத்தில் ரயில், பேருந்து போக்குவரத்து மட்டும் இன்றி விமான சேவையும் முடங்கியது. கடந்த 1933 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் கடுமையான அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான கால கட்டத்தில் மட்டும் 40 செ.மீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கின்றன. இதனால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கூட பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டு நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

முனிச் நகரத்தில் விமான சேவையும் பாதிக்பட்டுள்ளது. அதிகப்படியான பனிப்பொழிவால் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், 760 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஏற்பட்ட இந்த பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!