பள்ளி மாணவர்கள் காலையில் இறைவணக்கக் கூட்டத்திற்காக வரிசையில் நின்றபோது, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று அவர்களைப் போலவே பின்னங்கால்களில் நிமிர்ந்து, முன்னங்கால்களை மார்போடு சேர்த்துக்கொண்டு அசையாமல் நின்ற சுவாரசியமான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மைதானத்தில் மாணவர்கள் வரிசையாக நின்று இறைவணக்கம் பாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுடன் இணைந்து நின்ற அந்த நாய், மாணவர்கள் பாடி முடிக்கும் வரை அதே நிலையில் மிகுந்த ஒழுக்கத்துடன் நின்றது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த காணொளி பலரது கவனத்தை ஈர்த்ததுடன், இந்த நாய் மாணவர்களை விட மிகச் கச்சிதமாக விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும், பள்ளியின் மிகவும் ஒழுக்கமான மாணவர் இவர்தான் என்றும் வேடிக்கையாகவும் நெகிழ்ச்சியுடனும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.








