கம்போடியா தலைநகர், நோன்பென்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 687 கைபேசிகள் , 46 மலேசிய சிம் கார்டுகள் மற்றும் ஏராளமான கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் கம்போடியாவைத் தளமாகக் கொண்டு, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை "போலி முதலீட்டுத் திட்டங்கள்" மூலம் ஏமாற்றி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மைய காலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய 'சைபர் ஸ்கேம்' புகார்கள் அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் வேலை தேடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சு, அறிவுறுத்தி வருகிறது.








