தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோலுக்கு, தேர்தல் பரப்புரையின் போது சட்டவிரோதமாக இலவசக் கருத்துக்கணிப்புகளைப் பெற்ற குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த அதிபர் தேர்தலின் போது, அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து மில்லியன் கணக்கான வோன் மதிப்புள்ள போலி மற்றும் முறைகேடான பொதுக் கருத்துக்கணிப்புகளைத் தனது சாதகத்திற்காகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தென்கொரியாவின் அரசியல் நிதிச் சட்டத்தை மீறும் செயலாகும்.
இந்த வழக்கை விசாரித்த சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், நாட்டின் உயரிய பதவியில் இருந்த ஒருவர் இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகக் கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக யூன் சுக்-இயோலின் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








