ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய தேவையான முயற்சிகளில் இணைவதற்கு தயார் என முக்கிய ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் கனடா ஆகியவை இணைந்து நேற்று வியாழக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
மேலும், எரிசக்தி சந்தைகளை நிலைநிறுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாக அவை குறிப்பிட்டுள்ளன.
இந்த கூட்டு அறிக்கையை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ளன.
பெர்சியன் வளைகுடா பகுதியில் ஆயுதமற்ற வணிகக் கப்பல்களை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களைக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஈரான் படைகள் ஹோர்முஸ் நீரிணையை நடைமுறையில் முடக்கியுள்ள சூழ்நிலையையும் கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.








