இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும், ஐந்தாவது ட்ரோனை ஏவத் தயாராக இருந்த ஈரானின் பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) துறைமுக நகரிலுள்ள தரைக்கட்டுப்பாட்டு ராணுவத் தளம் ஒன்றையும் அமெரிக்கப் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துள்ளன. தங்களின் படைகளைப் பாதுகாக்கவும், தற்காப்பு நடவடிக்கையாகவுமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையே நீண்ட கால அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியில் நீடித்து வரும் வேளையில், இந்தத் திடீர் மோதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உலகச் செய்திகள்
ஈரானிய ராணுவத் தளம் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
Related News

குறைந்த ஆக்ஸிஜன் அளவால் ரத்த நண்டுகள் சாவு: பாரம்பரியத் தொழில் நலிவடையும் அபாயம்

வைர மோதிரத்தை ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்குப் பாராட்டு

250 வனவிலங்குகளைத் தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்குக் கடத்த முயன்ற மலேசியர் கைது

சிபிஎஸ்இ குளறுபடி: மாணவனின் விடைத்தாளை மாற்றிய வாரியம்! அதிர்ச்சியில் 12ஆம் வகுப்பு மாணவர்!

இன்ஸ்டா காதல் நிராகரிப்பு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!


