May 28, 2026
Thisaigal NewsYouTube
குகைக்குள் சிக்கிய தங்கம் தேடுபவர்கள்: ஒரு வாரப் போராட்டத்திற்குப் பின் 5 பேர் உயிருடன் மீட்பு
உலகச் செய்திகள்

குகைக்குள் சிக்கிய தங்கம் தேடுபவர்கள்: ஒரு வாரப் போராட்டத்திற்குப் பின் 5 பேர் உயிருடன் மீட்பு

Share:

வெள்ளத்தில் மூழ்கிய குகைக்குள் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஏழு பேரில் ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகச் சிறப்பு மூழ்காளர் குழுவினர் தெரிவித்துள்ளனர். எனினும், குகையின் இறுதிப் பகுதியிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவது அடுத்த பெரும் சவாலாக இருக்கும் என்று மீட்புப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தலைநகர் வியாஞ்சியான்னின் வடகிழக்கில் உள்ள மத்திய செய்சம்பூன் மாகாணத்தில் அமைந்துள்ள இந்தக் குகைக்குள், கடந்த மே 20 ஆம் தேதி ஏழு லாவோஸ் நாட்டினர் நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குகைக்குள் தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு குகையின் நுழைவாயிலை மூடியதால், அவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related News