கொவிட்-19 பெருந்தொற்று பரவலின்போது பொதுமுடக்கங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவுகள் காரணமாக, அதிக வருமானம் கொண்ட ஏழு நாடுகளில் கிட்டத்தட்ட 55,000 புற்றுநோய்ப் பாதிப்புகள் கண்டறியப்படாமல் விடுபட்டுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், அயர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், வழக்கமாக எதிர்பார்க்கப்படும் புற்றுநோய் கண்டறிதல்களில் 16 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக 'தி லான்செட் ஆன்காலஜி' இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய்களில் குறிப்பாகப் புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிதல் 24 விழுக்காடும், மார்பகப் புற்றுநோய் மற்றும் மெலனோமா தோல் புற்றுநோய் கண்டறிதல்கள் 18 விழுக்காடும் கணிசமாகக் குறைந்துள்ளன. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையால் 2.6 மில்லியன் நோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், எதிர்கால பொதுச் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்புகளின் தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் மீள்திறன் எவ்வளவு முக்கியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்
கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் 55,000 புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படாமல் விடுபட்டதாக ஆய்வில் தகவல்
Related News

குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ராட்சத கரடி! அதிரடியாக மூடப்பட்ட 94 பள்ளிகள்

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் பலி, மிண்டானாவோவில் பேரழிவு!

குழந்தைக் காவல் உரிமைப் போராட்டம்: துபாய் அரச குடும்பத்தின் முன்னாள் மருமகள் பிணையில் விடுதலை

பிரதமர் அன்வார் ஜப்பானுக்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்

கன்றுக்குட்டியுடன் நடனமாடிய நபர்


