கொவிட்-19 பெருந்தொற்று பரவலின்போது பொதுமுடக்கங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவுகள் காரணமாக, அதிக வருமானம் கொண்ட ஏழு நாடுகளில் கிட்டத்தட்ட 55,000 புற்றுநோய்ப் பாதிப்புகள் கண்டறியப்படாமல் விடுபட்டுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், அயர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், வழக்கமாக எதிர்பார்க்கப்படும் புற்றுநோய் கண்டறிதல்களில் 16 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக 'தி லான்செட் ஆன்காலஜி' இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய்களில் குறிப்பாகப் புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிதல் 24 விழுக்காடும், மார்பகப் புற்றுநோய் மற்றும் மெலனோமா தோல் புற்றுநோய் கண்டறிதல்கள் 18 விழுக்காடும் கணிசமாகக் குறைந்துள்ளன. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையால் 2.6 மில்லியன் நோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், எதிர்கால பொதுச் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்புகளின் தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் மீள்திறன் எவ்வளவு முக்கியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்
கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் 55,000 புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படாமல் விடுபட்டதாக ஆய்வில் தகவல்
Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


