சிங்கப்பூரின் மத்திய விரைவுச்சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில் 64 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ஆர்ச்சர்ட் ரோடு வெளிவழி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்காக 68 வயது கார் ஓட்டுநரைச் சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் பயணித்த பெண்ணும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








