Feb 4, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியா மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலையை உடைத்து திருடிச் சென்றதால் பரபரப்பு
உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியா மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலையை உடைத்து திருடிச் சென்றதால் பரபரப்பு

Share:

சிட்னி, பிப்ரவரி,04-

ஆஸ்திரேலியா மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலையை உடைத்துத் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய சமுதாயக் கூடத்தில் இருந்த 420 கிலோ எடையிலான வெண்கலச் சிலையை திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். ஒரு காலை தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்றது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மெல்போர்னின் ரோவில் புறநகரில் உள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்திலிருந்து 426 கிலோ எடையுள்ள வெண்கல சிலையை மூன்று குற்றவாளிகள் துண்டித்துச் சென்றனர்.

இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அச்சிலை இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசனால் இந்தியாவால் பரிசளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான அமைதி மற்றும் வலுவான உறவுகளை அடையாளப்படுத்தியது. இந்தா சின்னத்தின் இழப்பு குறித்து சமூகத் தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related News