பக்கத்து வீட்டுச் சண்டையைப் படம் பிடிப்பதற்காக, அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியே நபர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கியபடி இருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தெளிவாகப் பார்ப்பதற்காகவும், அதனைத் தனது மொபைல் போனில் பதிவு செய்வதற்காகவும் அந்த நபர் தன் பாதுகாப்பைக் கருதாமல், மிக உயரமான கட்டிடத்தின் ஜன்னலுக்கு வெளியே ஆபத்தான முறையில் இச்சம்பவத்தைச் செய்துள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அச்சமடைந்ததோடு, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எந்தவொரு வீடியோவும் ஒருவருடைய உயிருக்கு ஈடாகாது என்றும், இத்தகைய அதீத ஆர்வம் ஆபத்தானது என்றும் நெட்டிசன்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.








